ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

325.00

Add to Wishlist
Add to Wishlist

Description

புலவர் கா. கோவிந்தன் எழுதிய “ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு” எனும் இந்த நூலில், ஆரிய கலாச்சாரம் மற்றும் சமஸ்கிருதத்தின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படுவதற்கு முன்பிருந்த தூய தமிழர்களின் வாழ்வியல், சமூக அமைப்பு மற்றும் நாகரிகத்தைக் குறிக்கிறது.
வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க்களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம்பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி,பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம். இதற்கு மாறாகத் தங்கள் வாழிடங்களைச் சூழ உள்ள நிலக்கூறுபாடுகளின் தூண்டுதலாலும், வேறுவேறுபட்ட பண்பாடு, நாகரீகங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு இனமக்களோடு கொண்ட தொடர்பு தந்த செல்வாக்குளின் தூண்டுதலாலும், ஓரின மக்களின் சமூக சமய வாழ்க்கையில், சிறுகச் சிறுக ஏற்பட்டுவிட்ட வளர்ச்சி நிலைகளின் மதிப்பீடு அம்மக்களின் உண்ணல் பருகல், விளையாட்டு, ஆடல், பாடல், அரசர்க்கும் கடவுளர்க்கும் ஆற்றும் வழிபாடு ஆகிய இவைகளில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்களின் விரிவான விளக்கம், அம்மக்களின் உள்நாட்டு வாணிகம், சேய்மை அண்மைக்கண் உளவான நாடுகளோடு கொண்டிருந்த உறவுநிலை, குறியீட்டு நிலையாம் எளிய தொடக்க நிலையிலிருந்து, அரிதின் முயன்று பயின்றாலல்லது, எளிதில் விளக்கம் பெறமாட்டா. இலக்கிய, இலக்கண மரபுகள், முடிந்த முடிபாக முழுமையாக்கப்படும் வரையான, அவர்தம் இலக்கிய வளர்ச்சியின் விரிவுரை விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்பதின் பொருள் என்றால், தொல்லூழிக் காலத்திலிருந்து, கி.பி. 600 வரையான காலத்திற்கான தமிழர்களின் வரலாற்றினைத் திரும்ப வரைதற்குத் தேவைப்படும் வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் உள்ளன, அவ்வரலாற்றுக்கதையை மறுபடியும், வரைய முயலப்பட்டுள்ளது இந்நூலில்.

Additional information

Book Author

புலவர் கா. கோவிந்தன்

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-85-1

Pages

260

Published in

2026

Size

டெம்மி

Publishers

Aazhi Publishers

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...