Description
அறிஞர் அண்ணா மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், நாடக ஆசிரியர் என்று பலமுகங்கள் இருந்தபோதிலும் சிறுகதை ஆசிரியர் என்ற முகம் மிகவும் முக்கியமானது. அவருடைய மொத்த கதைகளின் சாரமும், நோக்கமும் சமூக மேம்பாடு, முன்னேற்றம். சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான். முதல் கதையிலிருந்து கடைசி கதை வரை அவருடைய கலகக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏனென்றால் வாழ்வினுடைய நெருக்கடியிலிருந்து, சமூகத்தினுடைய நெருக்கடியிலிருந்து உருவானது அவருடைய சிறுகதைகள். 1934 முதல் 1966 வரையிலான காலத்தில் அவர் மொத்தம் 113 சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றில் தேர்ந்தெடுத்த 4 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.


Reviews
There are no reviews yet.