Description
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை நெறி வகுத்துக் காட்டிய வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். திருக்குறளின் கருத்துக்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் கதைகள் வாயிலாக இந்நூலின் விளக்கப்பட்டுள்ளது. 1956-ஆம் ஆண்டு ‘முரசொலி’ வார இதழில் “குறளோவியம்” என்ற தலைப்பில் எழுதத் தொடங்கி. அதன் பின்னர் “தினமணி கதிர்” இதழில் வாரந்தோறும் குறளோவியம் வெளிவந்தது. அதன் பிறகு முரசொலி மாறன் வெளியிடும் ‘குங்குமம்’ வார இதழில் குறளோவியம் தொடர்ந்தது. இந்த நூலில் முன்னூறு குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. பயன் படுத்தப்பட்டுள்ள குறட்பாக்கள் 354 ஆகும். அறத்துப்பாலில் 76 குறட்பாக்கள், பொருட்பாலில் 137 குறட்பாக்கள். இன்பத்துப் பாலில் 141 குறட்பாக்கள். இந்த 354 குறட்பாக்களுக்கும் சொல்லோவியம் இயற்றிட, செழிப்பு மிகுந்த செந்தமிழ் துணை நின்றுள்ளது என்பதை நூலுக்குள் நுழைந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.


Reviews
There are no reviews yet.