Description
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் “சங்கத் தமிழ்“ என்னும் நூல், சங்க இலக்கியப் பாடல்களுக்கு எளிய தமிழில் புதுக்கவிதை வடிவில் விளக்கம் அளிக்கும் ஒரு முக்கிய இலக்கியப் படைப்பாகும். சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்கியளிக்கும் இனிய பநுவல், உள்ளத்தைக் கவ்வும் பாங்கிலும், நெஞ்சத்தில் தோயும் செஞ்சொற்களாலும், வடிக்கப் பெற்றிருப்பதால், உள்ளபடியான ‘கவி-தை‘ நூலாகும் இது. எதுகையையும், மோனையையும், சீரையும், தளையையும் தேடுவதில் சிந்தையைச் செலுத்திக் கொண்டிராமல், உள்ளிருந்து ஊற்றெடுக்கும் மொழியும் பொருளும் இயல்பாக இயங்குமாறு உரிமை நலம் வழங்கப் பெற்ற, உண்மைப் பாடல்களை உருவாக்கித் தரும் உயர் நூல், பட்டுச் சொல்லும் பான்மையால் பாடல்களாயின. தமிழ்மொழி தெரியாதவரும், தமிழ் ஓசை அளிக்கும் செவி இன்பத்தை நுகரலாம். பலவகை பழநறுக்கும், நுறுமணப்பொருளும், தேனோடு கலந்து இனிக்கும் தெவிட்டாத கனிக்கலவையே இந்நூல்.


Reviews
There are no reviews yet.