Description
பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்குத் தொடக்கப் பேருரையாக திராவிட இயக்கம் எனும் தலைப்பில் நிகழ்த்திய உரையின் தொகுப்பே இந்நூல்.
திராவிட இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் நோக்கம் குறித்து விவரிக்கிறது இந்நூல். சமூகத்தில் நிலவிய சாதி அமைப்பு, மத நம்பிக்கைகள் மற்றும் சமூக அநீதிகள் குறித்தும், முதலில் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பின்னர் பிறவி அடிப்படையிலான சாதியாக மாறி, சமூகத்தில் சமத்துவமின்மையை உருவாக்கியது குறித்தும், தென்னாட்டில் பிராமணர்களின் சமூக ஆதிக்கம் அதிகமாக இருந்ததும், இதனால் பிற சாதியினருக்கு ஏற்பட்ட அநீதியும், கடவுள் மற்றும் மதவாத நம்பிக்கைகள் மனிதர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் கருவியாக இருந்ததையும், இதனால் ஏற்பட்ட சமூக அநீதிகளை எதிர்த்து, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை அடிப்படையில் திராவிட இயக்கம் உருவான வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.

Reviews
There are no reviews yet.