Description
நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய “பண்டைக் கிரேக்கம்” எனும் இந்நூல், பண்டைய கிரேக்க நாட்டின் அரசியல், கலாச்சாரம், மதம் மற்றும் சமூக அமைப்பு முறைகளை விளங்குகிறது. பண்டைய கிரேக்கம் தெசாலி, ஹெல்லாஸ், பெலபோனீஸஸ் மற்றும் மாசிடோனியா என நான்கு முக்கிய மண்டலங்களாக இருந்ததையும், ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா நகரங்களின் வெவ்வேறு ஆட்சி முறைகள், குறிப்பாக கிளிஸ்தெனீஸ், சோலன் போன்றவர்களின் சீர்திருத்தங்கள் மூலம் மக்களாட்சி மலர்ந்த விதம், கிரேக்கர்களின் பன்னிரண்டு முக்கியக் கடவுள்கள் (ஜியஸ், அப்பலோ, அத்தினே போன்றவை) மற்றும் அவர்களின் புராணக் கதைகளையும், அக்கால மக்கள் கொண்டிருந்த மூடநம்பிக்கைகளையும், அவற்றைச் சாடிய சாக்ரடீஸ் போன்ற சிந்தனையாளர்களின் பங்களிப்பையும் விவரிக்கிறது. இல்லியட் மற்றும் ஓடிஸி போன்ற ஹோமரின் காவியங்கள் கிரேக்க சமூகத்தைப் பிரதிபலிக்கும் விதம் கி.மு. 776-ல் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் விளையாட்டு முறைகள், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ‘ஒலிம்பியா ஜியஸ் சிலை’ போன்ற சிற்பக் கலைச் சிறப்புகள் போன்றவற்றை இந்நூலில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Reviews
There are no reviews yet.