Description
பார்ப்பனரல்லாதோர் கொள்கை அறிக்கை (Non-Brahmin Manifesto) என்பது 1916 டிசம்பர் 20 அன்று தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் (நீதிக்கட்சி) வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமாகும். சர் பிட்டி தியாகராயர் முன்னின்று வெளியிட்ட இந்த அறிக்கை, அக்காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நிர்வாகத்தில் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தை எதிர்த்து, பார்ப்பனரல்லாதோருக்கான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தியது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகையில் பார்ப்பனரல்லாதோர் பெரும்பான்மையாக இருந்தும், அரசு பணிகள் மற்றும் கல்வியில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அரசாங்க அலுவல்கள், பொது நிறுவனங்கள் (நகராட்சி, மாவட்ட கழகம், சட்டசபை) மற்றும் கல்வித்துறையில் பார்ப்பனரல்லாதோருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று இந்த அறிக்கை கோரியது. இந்த அறிக்கை திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கான போராட்டங்களுக்கும் ஒரு முக்கியமான அடித்தளமாக அமைந்தது.
இந்த அறிக்கையுடன் சேர்த்து இதனோடு தொடர்புடைய சில கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Reviews
There are no reviews yet.