Description
தந்தை பெரியாரின், ‘பெண் ஏன் அடிமையானாள்?’எனும் இந்நூலில் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அடிமைக்குள்ளும் அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களின் விடுதலைக்காக பெரியார் ஏற்றிவைத்த சுடர், இந்த நூலின் பக்கங்கள்தோறும் ஒளிர்கிறது. கற்பை ஒழுக்க நெறியாக வைத்துக் கொண்டாடியதோடு அதையே பெண்களை அடிமைப்படுத்தும் கருவியாகவும் செயல்படுத்தியவர்கள் மத்தியில் கற்பு என்ற பொருளையே கேள்விக்குள்ளாக்கியவர் பெரியார். விதவைகளின் நிலை குறித்தும் மறுமணத்தின் தேவை குறித்தும் எடுத்துச் சொன்னவர் பெரியார். பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார். அதில் பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளைப் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார். 1926 முதல் 1931 வரை பல்வேறு காலகட்டங்களில் ‘குடி அரசு’ இதழில் பெரியார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Reviews
There are no reviews yet.