Description
வருணாஸ்ரமம் என்ற மிகப் பெரிய கேட்டினைக் களைந்தாகவேண்டிய பெரிய பாரமான, ஆபத்தளிக்கக்கூடிய. பொறுப்பு நமக்கு இன்று இருக்கிறது. வர்ணாஸ்ரமத்தின் கோர விளைவுகளை நாம் புரிந்து கொள்ளும்படி நமது தலைவர் பெரியார் பேருதவி செய்துள்ளார். அவருடன் துணை நின்று வர்ணாஸ்ரமத்தைத் தாக்கித் தகர்க்க வீரர்கள் தேவை. இத்தகு வீரப்படைக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லுமாறு நான் உங்கள் சார்பில் – அனுப்பும் அன்பழைப்புத்தான் இது. பல காலமாக அவரை எங்கெங்கோ ‘இரவல்’ கொடுத்தோம். இனியும் நமக்கும் அவருக்கும் அந்நிலையே தானா! தமிழகம் தன் வீரப் புதல்வனை உரிமையுடன் கூவி அழைக்கிறது. “மகனே! மாநில மெங்கும் உரிமைப்போர் நடக்கிறது. நானோ அரசியல், பொருளியல், சமுதாய மத இயல் சகலவற்றிலும் அடிமைப்பட்டுத் தவிக்கிறேன். நீயோ, யாராருக்கோ சென்று ‘சேவை’ செய்கிறாய் வீடு திரும்பி வா! பெற்றவளைப் பார் அவளுக்குற்ற துயர் நீக்கு!” என்று கூறுகிறது. இந்நூலின் கருத்து இதுவே.

Reviews
There are no reviews yet.