Description
இந்நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூலின் நான்காம் பாகமாகும். இந்நூல் 1999 முதல் 2006 வரையிலான அரசியல் நிகழ்வுகளை உள்ளடக்கியது. இதில் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம் மற்றும் அவர் சந்தித்த அரசியல் சவால்கள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. “நெஞ்சுக்கு நீதி” சுயசரிதையாக தொடங்கப்பட்ட போதிலும், பின்னர் இது திராவிட இயக்கத்தின் வரலாறாகவே விரிவடைந்து, இன்னும் சொல்லப் போனால், தமிழக அரசியல் வரலாற்றின் அடிப்படையான ஒரு பகுதியாகவே அமைந்து விட்டது; மேலும், திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் சமூக – பொருளாதார மாற்றங்களுக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பைப் பற்றிய விளக்கமாகவும் அமைந்திருக்கிறது இந்த நூல்.


Reviews
There are no reviews yet.